Loading...

உழவாரப்பணி சேவைகள்

ஆலய வளாகத்தில் அமைந்துள்ள நந்தவனம், தீர்த்தக்குளம், நீர்நிலைகள் மற்றும் திறந்த வெளிகளையும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் பராமரிப்பது உழவாரத் திருப்பணியின் முக்கிய பொறுப்பாகும். இதன் மூலம் ஆலயம் மட்டுமின்றி, அதன் சுற்றுப்புற சூழலும் தூய்மையாகப் பாதுகாக்கப்படுகிறது.
ஆலய கோபுரங்கள், விமானங்களில் பழுதடைந்த செதுக்கல்களை அகற்றுதல்
ஆலயம் சுற்றிலும் பாதையை சீர்செய்தல்
ஆலய நந்தவனத்தில் உள்ள தேவையற்ற புதர்களை, செடிகளைக் அகற்றுதல்
ஆலய சுற்றுச்சுவர் முழுவதும் வர்ணம் பூசுதல்
உழவாரம் செய்யும் அடியார்களுக்கு அன்னம் வழங்குதல்
ஆலய தெப்பக்குளத்தை தூர்வாரி சுத்தம் செய்தல்
கற்கோயில் திருப்பணிக்கு மாதம் ஒரு ஆலயத்திற்கு நிதிகாணிக்கை வழங்குதல்
உலோக திருமேனிகள், திருவாசி, பூஜை பாத்திரங்கள், விளக்குகளை சுத்தம் செய்து மேம்படுத்தல்
ஆலய கோமுகி தீர்த்தத்தை சுத்தம் செய்தல்